பரிசு கொடுத்து பதவி பெற்றான். – சிறுவர் கதை – Tamil Kids Story
அக்காலத்தில் நாட்டின் தலைவனுக்கு, அங்கு வாழும் மக்கள் நேரில் சென்று தங்கள் தேவைகளை, அநீதிகளை எடுத்துக் கூறி நீதி கேட்கலாம். முற்காலத்தில் அரசன் ஒருவனிடம், தன் கஷ்ட நிலையை எடுத்துக் கூறி நிவாரனம்பெற ஒரு வயோதிபன் விரும்பினான். அரசனை வெறுங்கையுடன் சென்று சந்திக்க விரும்பாத அந்த வயோதிபர் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த ருசி மிக்க கரும்புத் துண்டுகள் சிலவற்றை எடுத்துச் செல்ல முடிவு செய்தான்.
அரசனைச் சந்திக்க இன்னும் 10 மைல்கள் தூரம் நடந்து செல்ல வேண்டும். வயோதிபனுக்கு களைப்பு ஏற்பட்டது. சூரியனும் மறைந்து விட்டான். பக்கத்தில் இருந்த மடத்தில் கையோடு கொண்டு வந்த உணவுப் பொட்டலத்தை அவிழ்து சாப்பிட்டுவிட்டு அவ்விடத்திலேயே தூங்கிவிட்டான்.
அன்று இரவு அமாவாசை நாள். அதாவது சந்திர மாதத்தின் கடைசி நாள். எங்கும் ஒரே இருட்டு.மடத்தை நோக்கி வந்த கள்வன் ஒருவன் வயோதிபனின் பார்சலை அவிழ்த்துப் பார்த்தான். கரும்புத் துண்டுகளை கண்டு மகிழ்ந்தான். கரும்புத் துண்டுகளை எடுத்துக் கொண்ட கள்வன் அதே அளவு கொள்ளிகள் வைத்துக் கட்டிவிட்டுச் சென்றான்.
அடுத்த நாள் காலை வயோதிபன் எழுந்து தான் எடுத்து வந்த பார்சலை அரசனிடம் எடுத்துச் சென்றான். அரசனின் முன்னிலையில் சிரித்த முகத்துடன் பார்சலை அவிழ்த்தான். உடனே வயோதிபனின் முகம் கறுத்துவிட்டது. வியர்வை கொட்ட ஆரம்பித்தது.
கரும்புப் பார்சலில் விறகுக் கொள்ளிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வயோதிபன் தன் நிலையை ஒருவாறு சமாளித்துக் கொண்டு “அரசே! இந்த விறகைக் கொண்டு உணவைச் சமைக்கிறோம். எஞ்சிய விறகை உங்களுக்கு அன்பளிப்பாக எடுத்து வந்தேன்” இதைத் தவிர வேறு ஏதும் என்னிடம் இல்லை என்றான்.
சிரிப்பை அடக்கிக் கொண்டு அன்பளிப்பை ஏற்றுக் கொண்ட அரசன், வயோதிபரின் விவேகத்தைக் கண்டு மகிழ்ந்து, வயோதிபருக்கு அரச சபையில் ஆலோசகர் பதவியைக் கொடுத்து அரண்மனையில் குடும்பத்தாருடன் வந்து தங்கும்படி சொன்னான்.
சுவரொட்டி (சிறுகதை)
அப்துல்லா வறுமையில் வாடிய பிள்ளை, தந்தையை இழந்து, தாய் அப்பம் சுட்டு விற்பனை செய்பவள். அப்துல்லாவின் மாமன் ஊருக்கே பெயர் போன பணக்காரன். ஆனால் அப்துல்லாவிற்கு மாமாவிடம் இருந்து உதவி பெற பாக்கியம் இல்லை.
“பக்கத்து வீட்டில் பசித்திருக்கும் போது, தான் மட்டும் புசிப்பவன் உண்மையான முஸ்லிம் அல்லன்” என அடிக்கடி இரவு காலத்தில் இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்சி குரல் கொடுத்து உபதேசம் புரியும்.
அந்த ஹதீஸைக் கேட்டு ரசிக்கும் மஹ்தூம் ஹாஜியாரின் இதயத்தை அது தொடவேயில்லை. கஷ்டப்பட்டு பணம் தேடி பணக்காரர்களாக வாழ்வோருக்கே ஏழைகள் படும் துயரம் விளங்கும். அடுப்பங்கரைகளில் பெண்கள் விடும் கண்ணீருக்கு பொருள் விளங்கும்.
1971ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட ஜே.வி.பி.யின் கலவரத்தினால் தூரத்து முதலாளிமார் விட்டுச் சென்ற பொருட்களுக்கு குறுக்கு வழியில் உரிமையாளரானவர் மஹ்தூம் ஹாஜியார்.ஸக்காத் கொடுக்க போட்டி போடாவிட்டாலும் ஹஜ் செய்வதற்கு போட்டி போட்டு வெற்றி கண்டவர்.பணம் வரும் போது குணம் மாறும் என்பதை ஏழை உறவினர்களுக்கு எடுத்துக்காட்டிய பெருமை மஹ்தூம் ஹாஜியாரையே சாரும்.
இளைஞன் அப்துல்லா ஏ.எல்.பரீட்சை எழுதிவிட்டு அரசியல் வாதிகளின் பின்னால் அலைந்து திரிந்து பாடம் படித்தவர். அரசியல் வாதிகளுக்காக கொடிகள் கட்டியும், சுவரொட்டிகள் ஒட்டியும், கோஷங்கள் எழுப்பி சுலோகங்களுடன் வாழ் நாட்களை வீண் நாட்களாக கடத்தியவர். அரசியல் வாதிகளுக்கு ஞாபகசக்தி குறைவு என்பதை உணர்ந்து இறைவன் அருளால் கல்வியே கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் ஆசிரியர் நியமனத்திற்கான போட்டிப் பரீட்சையை எழுதினார். அப்துல்லாவின் நண்பன் பீர் முஹம்மதுவும் எழுதினார். போட்டிப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற அப்துல்லா அரசியல்வாதிகளின் உதவி இல்லாமலேயே ஆசிரிய நியமனம் பெற்றார்.
அவரின் நண்பர் பீர் முஹம்மது பரீட்சையில் தவறிவிட்டார். அன்று முதல் நண்பர் பகைவராக மாறினார்.
அப்துல்லா ஊர்ப் பாடசாலையில் நியமனம் 5ம் தரத்திற்கு பொறுப்பாசிரியராக இருந்தார். அதே வகுப்பில் மாமன் மஹ்தூம் ஹாஜியாரின் மகன் அமீன் முதல் மாணவனாக கல்வியில் சிறந்து விளங்கினான். மாமனுக்கு அப்துல்லா ஆசிரியர் மீது குடும்ப பாசம் இல்லாவிட்டாலும், அவர் மகன் அமீனுக்கு வகுப்பாசிரியர் மீது நல்ல மரியாதை இருந்தது.
உழைப்பதற்கு குறுக்கு வழி இக்காலத்தில் அரசியலைத் தவிர வேறு ஏதும் இல்லை, என்பதை உணர்ந்த மஹ்தூம் ஹாஜியார் அரசியலில் குதித்தார். தேர்தல் சுவரொட்டிகளை அவரின் கையாட்கள் ஊரில் ஒட்டினர்.
அப்துல்லா ஆசிரியரின் வீட்டு முன் புறத்தில், பாழடைந்த வீட்டுச் சுவரில் ஒட்டப்பட்டிருந்த மஹ்தூம் ஹாஜியாரின் தேர்தல் சுவரொட்டிகளை கட்டாக்காலி ஆடுகள் கிழித்துச் சாப்பிட்டன .
சுவரொட்டிகளை கிழித்தவர் அப்துல்லா ஆசிரியர் என ஒரு கதையை பரப்பிவிட்டார் அவரின் பகைவர் பீர் முஹம்மது. சொந்தக் குரோதங்களுக்கு பழி வாங்க ஏற்ற காலம் தேர்தல் காலம் என்பதை அறிந்திருந்தார். அரசியல்வாதி மஹ்தூம் ஹாஜியார் சிந்திக்கவில்லை. எடுத்த எடுப்பிலேயே தம் கூலிப்படை காடையர்களை அப்துல்லா ஆசிரியருக்கு எதிராகத் தூண்டிவிட்டார். அப்துல்லா ஆசிரியரின் வாழ்வு முடிந்து விட்டது.
சில நாட்களின் பின் அவரின் மாணவன் அமீன் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் இலங்கையிலே ஆகக்கூடிய புள்ளிகள் 198ஐ பெற்று சாதனை படைத்து கல்விப் பகுதியினால் ஜப்பான் நாட்டுக்கு சுற்றுலாவை மேற் கொள்ளும் பாக்கியம் பெற்றான்.
ஆனால் நன்றி சொல்ல அந்த அப்துல்லா ஆசிரியரை அமீன் எங்கே தேடுவான்?
ஜும்ஆ பிறந்த கதை – Jumma History
( வாசகர்களின் நீண்ட காலக் கேள்விகளுக்கு கேள்வி பதில் முறையில் விளக்கம் தரப்படுகிறது )
பதில் : 1963ம் ஆண்டு முதல் இலங்கையில் வெளிவந்த பத்திரிகை சஞ்சிகைகளுக்கு கதை, கட்டுரை, கவிதை, நகைச்சுவை, சமூகக் குறைபாடுகளை எழுதி வந்தேன். அவை நல்ல பலன் அளித்தன. சில கருத்துக்களை சில பத்திரிகைகள் வெளியிடாமையாலும், சில பத்திரிகைகள் மக்களை தவறான வழியில் இட்டுச் செல்வதாலும், ஆபாசத்தை பரப்புவதாலும், வளரும் எழுத்தாளர்களுக்கு ஊக்கமளித்து, அவர்கள் ஆக்கங்களை வெளியிடவும், எதிர்காலத்தில் அச்சகத்துறையில் சிலரையாவது ஈடுபடச் செய்யும் நோக்கத்துடன் இப்படியொரு பத்திரிகையை வெளியிட முற்பட்டேன்.
பதில் : “யெளமுல் ஜும்ஆ” என்றால் வெள்ளிக் கிழமை. இந்தக் அறபுச் சொல் முஸ்லிம்கள் மத்தியில் அடிக்கடி சொல்லப்படும் ஒரு சொல்லாகும். நாட்களில் குளிர்ந்த நாள் வெள்ளிக்கிழமையாகும். இந்த நாளில் முஸ்லிம்கள் ஓய்வாக இருப்பார்கள். இப்படியான நாளில் “ஜும்ஆ” பத்திரிகையை வாசிக்க முஸ்லிம்களுக்கு நேரம் கிடைக்கும். பள்ளிவாசல்களில் தொழுகை முடிந்து செல்லும் மக்களுக்கு இப்பத்திரிகையை விநியோகிப்பதும் இலகு. என்ற காரணத்தையும் கருத்திற்கொண்டும், தென்னிலங்கையில் சிங்களச் சூழலில், இலங்கை வரலாற்றில் பல்வேறு புரட்சிகளை மேற்கொண்ட அரசியல்வாதிகளையும், இலக்கியவாதிகளையும், சமூக சேவகர்களையும் கொண்ட பலப்பிட்டி மண்ணில் இருந்து அறபு மொழியில் “ஜும்ஆ” எனும் பெயரில் ஒரு பத்திரிகை வெளிவந்து, வரலாற்றில் இடம்பிடிக்க வேண்மெனக் கருதி “ஜும்ஆ” என இப்பத்திரிகைக்கு பெயர் வைத்தேன்.
பதில் : இதற்கு முன் தமிழில் இப்படியொரு பத்திரிகை வெளிவந்ததாக சரித்திரம் இல்லை.
பதில் : இற்றைக்கு 33 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1977ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் திகதி வெள்ளிக்கிழமை முதல்.
பதில் : 60சதம். ( விற்பனையாளருக்கு கமிஷன் 10 சதம் )
பதில் : இதற்கு முன் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வெளிவந்த பத்திரிகைகளில் குறிப்பாக கல்முனையிலிருந்து (டாக்டர் அபூபக்கர் வெளியிட்ட) “அல்அறப்” பத்திரிகையில் “காசிம் காக்கா” எனும் பெயரில் தென்னிலங்கை பேச்சுத் தமிழில் நகைச்சுவையாக கருத்துக்களை வழங்கினேன். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த “வெற்றிமணி” எனும் சிறுவர் பத்திரிகையில் மாணவர்களுக்கான போட்டிகள் தயாரிப்பாளராகவும், பரிசு வழங்குபவராகவும் இருந்தேன். சம்மாந்துறை, கொழும்பு ஆகிய இடங்களிலிருந்து (மெளலவி அமானுல்லா நடத்திய) புதுப்பாதையில் இஸ்லாமிய பூங்கா தயாரிப்பாளராகவும், தினபதி நிருபராகவும், எழுத்தாளராகவும் இருந்தேன். கொழும்பு 06 பாமன்கடையிலிருந்து வெளிவந்த ஈழமக்கள் குரலில் “இஸ்லாமிய பூங்கா” தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தேன். இப்படியாக கிடைத்த அனுபவங்களைக் கொண்டு “ஜும்ஆ” வை சிறந்த முறையில் நடத்த முயற்சி எடுத்தேன்.
பதில் : ஆம்! வானொலியில் ஆக்கங்கள் இடம்பெற்றன. இஸ்லாமிய நற்சிந்தனை, கவிதைகள், கட்டுரைகள், பேச்சுக்கள் இடம்பெற்றன.ஓய்வு இன்மையால் வானொலித்துறையை கைவிட்டேன்.
பதில் : எதை எழுதினாலும் சிலருக்கு காட்டி அவர்களின் ரசிப்புத் தன்மையை இனங்கண்ட பிறகே பத்திரிகையில் வெளியிடச் செய்வேன். இதனை ஜும்ஆவில் நடைமுறைப் படுத்திவருகின்றேன்.
பதில் : தினகரனில் சிறு விளம்பரம் கொடுத்தேன். அதற்கு ஏற்பட்ட செலவு 12 ரூபாதான். நூற்றுக்கணக்கில் வந்த கடிதங்களில் சுமார் 150 பேர்களை நிருபர்களாக ஏற்பாடு செய்தேன். ஆளுக்கு 10 பிரதிகளாவது வாங்க வேண்டுமென கோரினோம். துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தோம்.
பதில் : அக்காலத்தில் அபியுக்தன் பத்திரிகை ஆசிரியராக எச்.எம்.பி.மொஹிதீன் இருந்தார். இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்க சிறந்த முறையில் அவர் செயல்பட்டார். 1976ம் ஆண்டில் கொழும்பு யூனியன் பிளேசில் ஜுபிலி ஹோலில் எழுத்தாளர் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் ஜும்ஆவின் வருகை பற்றிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தோம். ஜும்ஆவுக்கு வருடச் சந்தா 20 ரூபா எனவும், முன்கூட்டியே சந்தா செலுத்துவோருக்கு ஆண்டுச் சந்தா 10 ரூபா எனவும் அறிமுகப்படுத்தினோம். நிருபர்களும் சந்தா சேகரித்து உதவினர்.
பதில் : ஆம்! சுவரொட்டி விளம்பரத்தை நவீன முறையில் அமைத்தேன்.
பதில் : “வெள்ளிக்கிழமை வெளிவருகிறது ஜும்ஆ வாசிக்கத் தவற வேண்டாம்” என சுவரொட்டி வெளியிட்டேன். எனது நண்பரும் ஜும்ஆவின் முக்கிய உதவியாளருமான பலாங்கொடை ஸலாம் என்பவர் இந்த சுவரொட்டி விளம்பரத்தை தென்னை மரங்களில் ஒட்டியிருந்தார்.
ரமளான் மாதத்தில் பிறை பார்ப்பது அவசியமானதா?
பிறை விடயத்தில் விஞ்ஞான கணிப்பை ஏற்பது சரியானதா? விளக்கம் இல்லாத குழப்பம்!
ஒவ்வொரு ரமழான் மற்றும் அதையடுத்து வரும் பெருநாளின்போது மாதத்தின் முதல் நாளை தீர்மானிப்பதில் பலத்த சர்ச்சைகள் எழுவது வழமையாகி வருகிறது. அறியாமை, பிடிவாதம், மனோ இச்சையைப் பின்பற்றுதல், கெளரவம் பார்ப்பது போன்றவை இந்த சர்ச்சைகளுக்கு முக்கிய காரணங்களாகும். மேலும்..
தயிரை சாப்பிட்டு வந்தால் –
சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.
பழச்சாறு உடலுக்குத் தேவையான வைட்டமின் `சி’யை அளிக்கிறது. தயிரும் பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ளது.
மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து.
அப்ரண்டீஸ் மற்றும் வயிற்றுப் போக்குக்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும்.
மஞ்சள் காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.
மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.
சில தோல் வியாதிகளுக்கு மோரில் நனைந்த துணியை பாதித்த இடத்தில கட்டி வருவது சிறந்த மருந்தாகும். தோல் வீக்க நோய்க்கு மோர் கட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.
– dinakaran.com